செவ்வாய், 14 ஜனவரி, 2020

முடிவுக்கு வந்தது விண்டோஸ் 7

முடிவுக்கு வந்தது விண்டோஸ் 7
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆப்பரேட்டிங் சிஸ்டமான விண்டோஸ் 7 இன்று 14ம் தேதியுடன் முடிவுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தால்  அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இனிமேல் இந்த ஓஎஸ் பாதுகாப்பாக இயங்க தேவையான செக்யூரிட்டி அப்டேட்களை பெற இயலாது. இதன் காரணமாக இந்த ஓஎஸ்-ஐ பயன்படுத்துபவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 2015ம் ஆண்டு #விண்டோஸ்10 என்ற ஒஎஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இருந்தாலும்  இன்னும் பலர் விண்டோஸ்7 ஒஎஸ்-ஐ அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். மிகவும் யூசர் ப்ரண்ட்லியாக இருப்பதால்  விண்டோஸ்7 பயன்பாடு அதிக் அள்வில் இன்னும் பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விண்டோஸ்7 மென்பொருளின் பயன்பாட்டை முழுமையாக நிறுத்துவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் இன்றுடன் (14ஆம் தேதி) பின் விண்டோஸ் 7 கம்ப்யூட்டர்கள் இயங்குமா? என்ற சந்தேகம் பலரது மனதில் எழுந்துள்ளது. விண்டோஸ் 7 ஒஎஸ் உள்ள கம்ப்யூட்டர் வழக்கம்போல் இயங்கும் என்றும் ஆனால் அதை பயன்படுத்தும்போது மென்பொருளில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அது சரி செய்யப்படாது எனவும் மைக்ரோசாட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் விண்டோஸ்7-ன் ஒரிஜினல் மென்பொருளை பயன்படுத்துபவர்கள் இலவசமாகவே விண்டோஸ்10 மென்பொருளை அதன் இணைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அப்கிரேட் செய்து விண்டோஸ் 10 ஆக பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக